வெள்ளி, 5 மார்ச், 2010

kavithai

இது தான் கவிதையா? - திருகண்ணபுரதான்




நிசப்தமும் மவுனமும்
நிழலுடன் கலந்து
உறைந்து கிடந்தது

தூக்கம் இரவுடன் கலந்து
மோகத்தில் நனைந்து கிடந்தது

நினைவும் கனவும்
உரசிக்கொள்ள
மனசுக் கருவறையில்
கவிதை விதை கர்ப்பம் கொண்டது

விடிந்தால் விருட்சம்
விடியாத வரை மோட்சம்

- திருகண்ணபுரதான்

1 கருத்து: